March 13, 2010

கலப்படமும்---தாய்ப்பாலும்

இந்த உலகத்திலேயே கலப்படம் இல்லாதது எது?
தாய்ப்பால் ஒன்றுதான்!
---எப்போதோ படித்தது.
ஒரு குழந்தை பிறந்த நொடியிலிருந்து ஆறு மாதங்களுக்கு அது தாய்ப்பாலை மட்டுமே சார்ந்திருக்கிறது. இப்போது அந்த தாய்ப்பாலும் விஷமாக மாறி வருகிறது
என்பது தான் நம்மை அதிரச்செய்யும் உண்மை. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட
ஆய்வுகளிலிருந்து, தாய்ப்பாலிலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பது
சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவு இது:

பால் மற்றும் பாலைக்கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் என்று 244மாதிரிகள் மற்றும் 130 பெண்களிடமிருந்து தாய்ப்பாலும் மாதிரிகளாக எடுத்துக்கொள்ளப்ப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. எல்லா மாதிரிகளிலும் DDD(Dichloro-Diphenyl-Trichloroethane)என்ற பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதையும்,Dioxine என்ற பூச்சிமருந்தும் கலந்திருப்பதை அறிந்து அதிர்ந்து போனார்கள்.

இதற்க்கெல்லாம் காரணம் யார்? தாய்ப்பாலிலும் கலப்படத்தை ஏற்ப்படுத்தியது யார்?

அவர்கள்...
லாபம் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு இயங்கும் பூச்சிக்கொல்லி மருந்து
தயாரிக்கும் இரசாயன ஆலைகள்! DDD என்ற பூச்சிக்கொல்லி மருந்து மிகவும் கொடுமையானது. Dioxine என்ற பொருள் நாம் சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் PVC
பைப்புகள் தயாரிப்பில் பயன்படுத்துவது. இவை எப்படி தாய்ப்பாலில் கலந்தது? என்றால்...
DDD என்ற பூச்சி மருந்து 1940 களில் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் விவசாயத்தில் பூசிக்கொல்லிமருந்தாக பயன்பாட்டிற்கு வந்தது.அமெரிக்க விவசாயிகள் ஆண்டுதோறும் பல டன் மருந்துகளை பயன்படுத்தினர். இந்தியாவில் கூட வெண்மை நிற மாவுப்பொருள் ஒன்றைக்கட்டி இது என்ன? என்று கேட்டால் DDD என்று சொல்லும் அளவிற்கு விவசாயிகள் மத்தியில் பிரபலமானது.
பிற்காலத்தில் DDD யின் கொடூரத்தை அறிந்தவுடன் 1970 களில் பெரும்பாலான நாடுகள் இதன் பயன்பாடு, உற்பத்தியை தடை செய்தன. இந்தியாவிலும் பயிர்களுக்கு DDD மருந்தை பயன்படுத்த 1989 இல் தடை விதிக்கப்பட்டாலும் மலேரியா ஒழிப்புக்கு இதுதான் இன்னும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் உற்பத்தி தடையின்றி தொடர்கிறது.இதில் கள்ளத்தனமாக கொஞ்சம் நமது வயல்களிலும் நுழைகிறது.
இன்றும் இந்தியாவும் , சீனாவும் மட்டும் இதை உற்பத்தி செய்துகொண்டும் , பயன்படுத்திக்கொண்டும் இருக்கின்றன.உலகிலேயே அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்வது இந்தியாதான்! என்பது வெளியில் சொல்லிக்கொள்ள இயலாத சாதனை.
இந்த இரண்டு பூச்சிக்கொல்லிகளையும் என்னதான் பத்திரமாகப் பயன்படுத்தினாலும் பயிர்களின் மீது தெளிக்கப்படும் இவை பூ, காய், பழம் என்று நாம் உட்கொள்ளும் பொருட்களில் கலக்கின்றன.
பொதுவாக இவை கொழுப்பு திசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் தான் சென்று சேர்கின்றன. இவற்றை பெண்கள் உட்கொள்வதால் அவர்களின் மார்பகங்களில் சென்று சேர்கின்றன. அவை உடலிலேயே தங்கி உடல் அழியும் வரை பக்கவிளைவை ஏற்ப்படுத்துகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இவை ஹார்மோன் சுரப்பிகளில் மாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றன. இவை பால் சுரப்பிகளிலும் பாதிப்பை உண்டாக்குவதால் இந்த வேதிப்பொருட்கள் தாய்ப்பாலிலும் கலக்கின்றன.
இவற்றினால் புற்றுநோய்,மனவளர்ச்சி குறைவு, உடல்வளர்ச்சியில்பாதிப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்ப்படுகின்றன.
காலில் போடும் செருப்பைக்கூட எ/சிஅறையில் வைத்து விற்பனை செய்கிறோம்.நாம் குடிக்கும் நீர், உண்ணும் உணவுமுதலியவை தூயமயானவையா? என்று பர்க்கத்தவறிவிடுகிறோம்.
குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலைக்கூட தூய்மையானதாக தரமுடியாத நவீன
அறிவியலால் என்ன பயன் விளையப்போகிறது?

No comments:

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive