March 6, 2010

நானும்--காரணமும்

வணக்கம் ,என் பெயர் கோ.மணிகண்டபிரபு நான் கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை கணினி அறிவியல்
படித்துக்கொண்டிருக்கிறேன் .நான் கட்டுரை எழுதுவதிலும் பிறரின் கட்டுரைகளை படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் உடையவன் .எனக்குள் பல சிந்தனைகள் தோன்றியும் அவற்றை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை அறியாமல் இருந்தேன் .எங்களது கல்லூரியில் மூன்று இதழ்கள் மாதம்தோறும் வெளிவருகின்றன .அதில் தமிழ்த்துறை வாயிலாக வெளிவரும் விடியல் என்ற இதழில் எனது கட்டுரையை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தினர்.மேலும் எனது சிந்தனைகளையும் ,எண்ணங்களையும் அனைவரும் அறியும் பொருட்டும் ,எனது எழுத்துக்களின் பண்பையும் ,அது பிறரிடம் ஏற்ப்படுத்தும் தாக்கங்களையும் அறிந்துகொள்ள எனது தமிழ் விரிவுரையாளர் திரு.இரா.குணசீலன் அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த வலைப்பதிவை நான் தொடங்கியுள்ளேன் .எனது எழுத்துக்களை செம்மைப்படுத்த தங்களின் மேலான விமர்சனங்கள் தேவை .எனவே என்னை விமர்சியுங்கள் .

No comments:

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive